தாய்ப்பால் கொடுப்பதின் நண்மைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நண்மைகள்

குழந்தைகளுக்கு முதல் 6 மாதங்கள் வரை கண்டிப்பாக தாய்ப்பால் மற்றுமே கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் கொடுப்பதால்

  • பிள்ளை மற்றும் தாய் இருவரின் சுகாதார நலன்கள் பெருகும், தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் நல்ல பாசப்பிணைப்பு எற்படுகிறது.
  • தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புத் தன்மையை பெருக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்.
  • குழந்தைகளுக்கு வயிறு மற்றும் குடல் நோய்கள் வராமல் தடுக்கும்.
  • குழந்தையின் ஜீரணம் சுலபமாக இருக்கும்  மற்றும் மலச்சிக்கல் ஏற்படுத்தாது.
  • உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.
  • லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.
  • குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன, மற்றும் குழந்தையின் புத்திக்கூர்மையை மேம்படுத்தும்.
  • தாய்மார்களின் உடல்எடை குறைவு சீக்கிரம் ஏற்படுகிறது, மற்றும் பிள்ளைபேறுக்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்க உதவுகிறது.
  • பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது

எப்பொழுது தாய்ப்பால் கொடுக்க துவங்க வேண்டும்?

குழந்தை பிறந்ததும் உடனடியாக தாய்ப்பால் கொடுக்க துவங்கிவிட வேண்டும். சிசேரியன் எனப்படும், அறுவைச் சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் தாயும், தாய்ப்பால் கொடுக்கலாம். இந்த அறுவைசிகிச்சை தாய்பால் கொடுக்கும் தன்மையை பாதிப்பதில்லை.இப்படிப்பட்டவர் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்கமருந்தின் விளைவுகளிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பியவுடன் பால் கொடுக்கலாம். படுத்தவண்ணமாக ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் அல்லது மருத்துவர் அனுமதியுடன் உட்கார்ந்த வண்ணமாக குழந்தையை தன் மார்போடு அணைத்துக் கொண்டு பால் கொடுக்களாம்.

குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பத்ற்கான காரணங்கள்

இதற்கு நான்கு முதன்மைக் காரணங்களுண்டு.

  1. குழந்தை பிறந்த 30 லிருந்து 60 நிமிடங்களில் நன்கு இயல்பாக சுறுசுறுப்பாக இருக்கும்.
  2. இந்த சமயத்தில் குழந்தைக்குப் பால் உறிஞ்சும் தன்மை மிக அதிகமாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கும்.
  3. சீம்பால் என்பது குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து சுரக்கும் மஞ்சள் நிறமான சுரப்பு. இதில் முழுக்க குழந்தைக்குத் தேவையான பாதுகாப்புப் பொருட்கள் உள்ளன. இப்பொருட்கள் குழந்தையை நோய் தாக்குவதிலிருந்து பாதுகாக்கிறது. இந்த சீம்பால் கிட்டத்தட்ட ஒரு நோய்தடுப்பு மருந்து போன்றது.
  4. தாய்ப்பால் கொடுப்பது தாயின் மார்பகங்களில் வீக்கம் கண்டு, ஏற்படும் வலியைத் தடுக்கிறது. அதே போல் குழந்தை பேறுக்குப்பின் ஏற்படும் உதிரப்போக்கை குறைக்கிறது.

எவ்வளவு காலம் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்?

கண்டிப்பாக முதல் ஆறுமாதங்கள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம்.தாய்ப்பல் மட்டும் தருவதால், ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை 98% கருதடை பதுகாப்பு அளிக்க முடியும் – ஆனால் அந்த பெண்ணிற்கு மாதவிடாய் வருவது தொடங்கி இருக்க கூடாது.

தாய்க்கு உடல்நலக்குறைவிருந்தால் தாய்ப்பால் கொடுக்கலாமா ?

ஆம் கொடுக்கலாம், பெரும்பாலான நோய்கள் குழந்தையை பாதிப்பதில்லை. டைபாய்டு, மலேரியா காய்ச்சல், எலும்புறுக்கிநோய், மஞ்சள்காமாலை அல்லது தொழுநோய் போன்ற நோய்கள் பாதிக்கப்பட்டிருப்பினும் தாய்ப்பால் தருவதை நிறுத்த தேவையில்லை.

Loading